Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை :பிரதமர் மோடியிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று தொலைபேசி வழியாகபேசினார்.அப்போது அவர் கூறியதாவது:மருத்துவ படிப்புக்காக, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், 50 சதவீதத்தை, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, ஒதுக்கும் வகையில், சட்டம் இயற்றலாம் என, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.
இதற்காக, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவத்துறை கவுன்சில் அதிகாரிகள் உடைய குழு அமைக்க வேண்டும். அந்த குழு கலந்தாலோசித்து, இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதங்களில், மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.